ஸ்டெர் லைட் ஆலைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று பொன்னமராவதியில் மதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தீர்ப்பிற்கு காரணமான வைகோவிற்கு நன்றி தெரிவித்தும் கொண்டாடினர். இதில், மாநில மருத்துவர் அணி செயலர் மு.சின்னப்பா, நகர செயலர் செந்தில், இளைஞர் அணி நிர்வாகி பிரின்ஸ், தலைமைக்கழகப் பேச்சாளர் மே. ராமச்சந்திரன், இளைஞரணி நிர்வாகி கே. சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.