புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து மோதி மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறந்தாங்கி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி மகன் சுரேஷ் (24). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பியபோது மேலூர் அருகே புதன்கிழமை சாலையைக் கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற அரசுப் பேருந்து சுரேஷ் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வெங்கடேசனிடம் (45) விசாரணை நடத்தி வருகின்றனர்.