கந்தர்வகோட்டையில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

கந்தர்வகோட்டையில் ரூ. 2.72 கோடி மதிப்பில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 


கந்தர்வகோட்டையில் ரூ. 2.72 கோடி மதிப்பில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
கந்தர்வகோட்டையில் உள்ள பழைமையான ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் சிதலமடைந்து இருந்த நிலையில் புதிய கட்டடம் கட்டவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், புதிய அலுவலகக் கட்டடம் கட்ட ரூ. 2 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம் முன்னிலை வகித்து புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com