ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ்  சார்பில் ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க குளிர்மை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ்  சார்பில் ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்க குளிர்மை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பேராசிரியர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பேராசிரியர்கள் வ.பழன்யா, ப.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளர் இராச.இளங்கோவன் வரவேற்று பேசினார்.
விழாவில், முனைவர் ப.வேங்கடேசன் எழுதிய, அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் பதிகத்தை  ஈ.வே.ரா கல்லூரியின் கணிதத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர்.ப.தமிழ்மணியும், மலைக்கோட்டை அருள்மிகு உச்சி விநாயகர் பதிகத்தை  தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சு.ஆனந்தன் பிள்ளையும் வெளியிட்டனர்.நூலை ஆய்வு செய்து பேராசிரியர் சு.செயலாபதியும், அகில இந்திய திருச்சி வானொலி நிலைய பணி ஓய்வு பெற்ற இசையமைப்பாளர் நெல்லை ஆ.சுப்பிரமணியனும் பேசினர்.
 நிறைவாக நூலாசிரியர் ப.வேங்கடேசன் ஏற்புரையாற்றினார்.பேராசிரியர். அ.கோபிநாத் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com