சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வாகன ஆய்வாளர்கள் செந்தாமரை, அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் தாமஸ் ராஜன், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்புப் பொதுநலச் சங்கத் தலைவர் கண. மோகன்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.