கந்தர்வகோட்டை அருகே நடந்த திருவிழாவில் தப்பாட்டம் ஆடிய இளைஞரை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை அருகிலுள்ள பழைய கந்தர்வகோட்டை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு செங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜா (33) தலைமையில் தப்பாட்ட குழுவினர் கோயிலுக்கு பால்குடம் , காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு முன் தப்பாட்டம் ஆடிக்கொண்டு சென்றனர்.
அப்போது பழைய கந்தர்வகோட்டையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (29) , வீரபாண்டியன் மகன் தண்டாயுதபாணி ( 26 ) ஆகிய இருவரும் ராஜாவை ஜாதியை சொல்லி திட்டி, தாக்கினர். இதுகுறித்து ராஜா கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிந்து பிரகாஷ் , தண்டாயுதபாணி ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.