வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி அந்தந்த சட்டப்பேரவைத்


புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி அளவில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ஆரியூரில் உள்ள குமரன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் புதுப்பட்டியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்தப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.அந்தந்தத் தொகுதிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை பணியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com