சோழபுரத்தில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சியில் மூன்று இடங்களில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட

கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சியில் மூன்று இடங்களில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் பேரூராட்சி அண்ணா நகரில் ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டிலும், ராமானுஜபுரம் பெரியார் நகரில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டிலும், காமராஜர் தெருவில் ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக ஆழ்குழாய் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன.  இவற்றை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.  இந்நிகழ்ச்சியில்,  கும்பகோணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கணேசன், சோழபுரம் பேரூர் நிர்வாகிகள்,  ஒன்றிய துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பகுதி செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com