தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கஜா புயல் காரணமாக வியாழக்கிழமை (நவ. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.