கும்பகோணத்தில் 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் புதன்கிழமை தூய்மைப்பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். துணைப் பதிவாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், வங்கி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் கும்பகோணம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் அசோகன், வங்கியின் மேலாளர் மற்றும் கூட்டுறவு சார் கண்காணிப்பாளர், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.