தஞ்சாவூரில் ஆதரவற்ற நிலையில் கிடந்த குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியில் தனியார் மருத்துவமனை எதிரே, பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை வெள்ளிக்கிழமை கிடந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று அக்குழந்தையை மீட்டனர்.
பின்னர், தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இக்குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.