புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் விரைவாக வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்கு மத்திய குழுவினர் உடனடியாக வர வேண்டும்.
மேலும், பாரபட்சமில்லாமல் தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.