பெட்ரோல் விற்பனையகத்தில் அலைமோதும் கூட்டம்

ஒரத்தநாடு பகுதியில் கஜா புயல் பாதிப்பால் பெட்ரோல் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


ஒரத்தநாடு பகுதியில் கஜா புயல் பாதிப்பால் பெட்ரோல் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது உட்பட ஏராளமான சேதம் அடைந்த நிலையில், சில இடங்களில் பெட்ரோல் விற்பனையகங்களும் சேதமடைந்தன. இதனால், சில குறிப்பிட்ட பெட்ரோல் விற்பனையகங்கள் மட்டுமே இயங்கும் நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், மழை தொடர்ந்தால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற ஐயத்தின் காரணமாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு போதுமான அளவில் பெட்ரோல் நிரப்பிக் கொள்கின்றன. இதனால், பெட்ரோல் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com