கும்பகோணம் அருகே மனைவியைக் கொலை செய்த விவசாயியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள நீலத்தநல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமி (42). விவசாயி. இவருக்கும், இவரது மனைவி அழகம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், அக். 10-ம் தேதி ஏற்பட்ட தகராறில் அழகம்மாளை ராமசாமி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து ராமசாமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ராமசாமியை போலீஸார் கைது செய்தனர்.