கும்பகோணம் அருகே மனைவியைக் கொன்ற விவசாயி கைது

கும்பகோணம் அருகே மனைவியைக் கொலை செய்த விவசாயியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே மனைவியைக் கொலை செய்த விவசாயியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள நீலத்தநல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமி (42). விவசாயி. இவருக்கும், இவரது மனைவி அழகம்மாளுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், அக். 10-ம் தேதி ஏற்பட்ட தகராறில் அழகம்மாளை ராமசாமி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார். இதுகுறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து ராமசாமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ராமசாமியை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com