தஞ்சாவூர்
ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் திரனேந்திரன் (40).
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் திரனேந்திரன் (40). இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் செப். 17-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசவளநாடுபுதூரில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்காகச் சென்றார்.
மீண்டும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, முக்கால் கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.