தஞ்சாவூர் மாவ ட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வளப்பக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவருக்குப் பா ராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வளப்பக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் விக்னேஷ்வரன். இவர் மத்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தேர்ச்சி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரமசிவம், பள்ளி தலைமையாசிரியர் டி. ராதா தலைமை வகித்தனர்.
விழாவில் வெற்றி பெற்ற மாணவர் விக்னேஸ்வரனுக்கு பரிசுகள் வழங்கியும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பாராட்டினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.