ஒரத்தநாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஒரத்தநாட்டில் காவலர் குடியிருப்புக்கு சொந்தமான பகுதியில்  இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டது

ஒரத்தநாட்டில் காவலர் குடியிருப்புக்கு சொந்தமான பகுதியில்  இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டது. 
ஒரத்தநாடு காவலர் குடியிருப்புக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஒரத்தநாட்டில் அரசு சார்பில் வேறு ஒரு இடத்தில் வீட்டுமனை வழங்கப்பட்டது. ஆனாலும், 
அவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற காலதாமதம் செய்து வந்தனர். இந்நிலையில்,  ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து உடனடியாக வீடுகளை அகற்றிக் கொள்ளாவிடில்,  பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் என தெரிவித்திருந்தார்.  இதன்படி,  சனிக்கிழமை மாலை சம்பந்தப்பட்டவர்கள் அவர்களாகவே முன்வந்து காவலர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com