தஞ்சாவூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் எம். பாலகிருஷ்ணன் (43). கள்ளச் சாராய வியாபாரி. சாராயம் விற்றது தொடர்பாக இவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாலகிருஷ்ணனை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.