தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள நா. வல்லுண்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சூர்யா (24). இவர் பைக்கில் கொல்லாங்கரை - வடக்குப்பட்டு சாலையில் வியாழக்கிழமை சென்றபோது தடுமாறி விழுந்து பலத்தக் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.