பாபநாசம் அருகே இளைஞர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாபேட்டை காவல் சரகம், புலவர்நத்தம் கிராமம்,கீழ்பாதியைச் சேர்ந்தவர் குமார் மகன் சேரரசன் (19). இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ டிப்ளமா முதலாமாண்டு படித்து வந்தார். 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இரவு தாமதமாக வீட்டுக்கு வந்த சேரரசனை பெற்றோர் திட்டினராம். இதில் மனமுடைந்த சேரரசன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com