தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தேசிய அளவிலான தீயணைப்பு மற்றும் ஆபத்துக் காலங்களில் வெளியேறுவது குறித்த செயல் விளக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தாளாளர் ஏ.வி. நடனசிகாமணி தலைமை வகித்தார். தீயணைப்பு உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ம. இளஞ்செழியன் உள்ளிட்டோர் செயல் விளக்கம் அளித்தனர்.
இதில், துணை முதல்வர் கே. சுவாமிநாதன், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.