பாபநாசம் வட்டம், மெலட்டூர் வருவாய் சரகத்துக்குள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்வதற்கான இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து வாக்காளர்களிடையே செயல் விளக்கமளிக்கப்பட்டது. இந்த முகாமை வட்டாட்சியர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் மண்டல துணை வட்டாட்சியர் தர்மராஜ், வருவாய் அதிகாரி கலையரசி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.