பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூரில் அரசாபவிமோசன பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 19 நாள்கள் பங்குனிப் பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வாகனப் புறப்பாடு, கருட சேவை நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில், காலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரசாப விமோசன பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர், மேளதாளத்துடன் நான்கு வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயிலில் மார்ச் 28-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.