வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழாவையொட்டி, மார்ச் 23, 24, 30, 31ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 24-ம் தேதியும், பல்லக்கு திருவிழா மார்ச் 31-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கழகம் மார்ச் 23-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும், மார்ச் 30 முதல் 31-ம் தேதி வரையும் வலங்கைமானுக்கு விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்கவுள்ளது.
இப்பேருந்துகள் கும்பகோணம் - வலங்கைமான், நீடாமங்கலம் - வலங்கைமான், தஞ்சாவூர் - வலங்கைமான், குடவாசல் - வலங்கைமான், பாபநாசம் - வலங்கைமான், மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.