வலங்கைமான் கோயில் விழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழாவையொட்டி,  மார்ச் 23,  24,  30,  31ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழாவையொட்டி,  மார்ச் 23,  24,  30,  31ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலங்கைமான் மாரியம்மன் கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 24-ம் தேதியும், பல்லக்கு திருவிழா மார்ச் 31-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கழகம் மார்ச் 23-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும், மார்ச் 30 முதல் 31-ம் தேதி வரையும் வலங்கைமானுக்கு விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்கவுள்ளது. 
இப்பேருந்துகள் கும்பகோணம் - வலங்கைமான், நீடாமங்கலம் - வலங்கைமான், தஞ்சாவூர் - வலங்கைமான், குடவாசல் - வலங்கைமான், பாபநாசம் - வலங்கைமான், மன்னார்குடி - வலங்கைமான் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com