அண்ணா பிறந்த நாள் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. 
போட்டிகள் வருகிற 23-ஆம் தேதி காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்ஆர்கே தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளன. 
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கிறார். 
நடுவராக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் கலந்து கொள்கிறார்.
இலக்கியத்தில் ஏற்றம் பெறும் வகையில் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்தி, போட்டியில் பெருமளவில்  பங்கேற்கச் செய்திட வேண்டும். 
மேலும், மாணவர்களின் பெயர் பட்டியலை, வருகிற 22-ஆம் தேதிக்குள், "மாவட்ட செயலர், கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி-607 302' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடந்த முறை போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்றவர்களை தற்போது அனுப்பி வைக்காமல் புதியதாக மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com