முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தீவிரம்

கடலூரில் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் பொதுப் பணித் துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர்.

கடலூரில் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் பொதுப் பணித் துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர்.
 கஜா புயலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையால் தேங்கும் தண்ணீர் பெரும்பாலும் கெடிலம், தென்பெண்ணையாறுகளில் வடிக்கப்பட்டு கடலில் கலக்க வைக்கப்படுகிறது. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரத்தை தூர்வாரும் பணியில் பொதுப் பணித் துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதிகளில் உள்ள முகத்துவாரத்தை கடலில் இணைக்கும் வகையில் தூர்வாரினர்.
மீன்பிடிப் படகுகள் நிறுத்தம்: கடலூர் மாவட்டத்தில் 49 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களிலிருந்து தினமும் சுமார் 4 ஆயிரம் சிறிய, பெரிய அளவிலான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். 
புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாள்களாக மீனவர்கள்  கடலுக்குள் செல்லவில்லை.  கடலானது புதன்கிழமை வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com