தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக்குழு கூட்டம், குழந்தைகள் தின விழா ஆகியவை கடலூரில் அண்மையில் நடைபெற்றன.
மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்து உரையாற்றினார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக டான்பாக் நிறுவன அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நேரு உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சாவடி கிளைத் தலைவர் வரதராஜன், புதுச்சேரி அரிமா சங்கத் தலைவி வித்யாஸ்ரீ, சீனுவாசன், வெங்கடேசன், கோதண்டராமன், ஓவிய ஆசிரியர் மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, சங்க உறுப்பினர் ராமன் வரவேற்க, ஆசிரியை ரம்யா நன்றி கூறினார்.