நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழைப் பெய்தது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்த நிலையில், வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடலூர் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன் கார ணமாக செவ்வாய்க்கிழமை காலை முதலே அவ்வப்போது லேசான மழை பெய்தது. புதன்கிழமை காலை முதல் லேசான மழையும், மாலை 5 மணிக்கு மேல் நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.