தீ விபத்து: எம்எல்ஏ நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை திங்கள்கிழமை வழங்கினார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை திங்கள்கிழமை வழங்கினார்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வானதிராயபுரம் ஊராட்சி, தென்குத்து கிராமத்தில் சபாபதி, மணிகண்டன், பச்சையம்மாள், இந்திரா நகர் ஊராட்சி மாற்றுக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோரது கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் உதவிகளையும் வழங்கினார்.
 நிகழ்வின் போது, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா, வருவாய் ஆய்வாளர் கெüரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்தசாரதி, சந்திரவதனம், கடலூர் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com