மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
 தமிழகத்தின் கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குறிப்பு அனுப்பியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலு,ம் கடல்பகுதிகளில் 50 முதல் 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். கடல்பகுதி ராட்சத அலைகளுடன் கொந்தளிப்பாய் காணப்படும். எனவே, மீனவர்கள் தற்போதைக்கு கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். குறிப்பாக, அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com