அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியாளர்கள் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளர்கள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளர்கள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 பொறியியல் புல கட்டடவியல் துறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, துறைத் தலைவர் வி.நேருகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.மனோகரன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக கட்டடவியல் துறை முன்னாள் தலைவர் எம்.பி.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், மாணவர்கள் பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 விழாவில் முன்னாள் பேராசிரியர்கள் ஜே.கண்ணன், எம்.பி.சொக்கலிங்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டன. பேராசிரியர்கள் வி.அருள்செல்வன், எஸ்.பழனிவேல், ராஜா, என்.மணிகுமாரி, டி.ரமேஷ், எஸ்.பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com