ஓசோன் தின விழிப்புணர்வுப் பேரணி

நெய்வேலி, வட்டம் 14-இல் உள்ள ஜவஹர் அறிவியல் கல்லூரி சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி, வட்டம் 14-இல் உள்ள ஜவஹர் அறிவியல் கல்லூரி சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கல்லூரியின் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறை, கரீன் ஆர்மி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசினார். நகர நிர்வாகப் பொது மேலாளர் எஸ்.ஆர்.சேகர் விழிப்புணர்வு மலரை வெளியிட, துணைப் பொது மேலாளர் முகமது அப்துல் காதர், கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் ரவீந்திரராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர், ஓசோன் மண்டலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
 தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை நகர நிர்வாகப் பொதுமேலாளர் எஸ்.ஆர்.சேகர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், ஓசோன் மண்டலம் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எந்திச் சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com