குறிஞ்சிப்பாடி அருகே லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (37). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக மீன்களை ஏற்றிவந்த லாரி மோதியதில் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கிராம மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.