நெய்வேலியில் என்எல்சி அதிகாரி தற்கொலை செய்துகொண்டார்.
நெய்வேலி, வட்டம்-24, சுரங்கச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (58). என்எல்சி சுரங்கம் 1-இல் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர் கடந்த ஜன.28-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனராம். அப்போது, அவரது மனைவி பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது ராமமூர்த்தி தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தாராம். சம்பவத்துக்கான காரணம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.