வடலூர் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

வடலூர் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும், பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது. 
அதன்படி, மாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல் மற்றும் அகவல் பாடப்பட்டது.
 சத்திய ஞான சபையில் இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. விழாவில், வடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் க.நாகராஜன், கணக்கர் ப.ஞானப்பிரகாசம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com