கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
அவ்வாறு கூட்டத்தில் பேச விரும்புவோர் தங்களது பெயர்களை காலை 10.30 மணிக்கு முன்பாக பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தங்களது கோரிக்கையை மனுக்களாக வழங்கலாம். அதற்கு உரிய அலுவலர்கள் பதில் அளிப்பார்கள்.
எனவே, விவசாயிகள் இந்தக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.