பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக் குழுச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் கே.செல்வக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிதம்பரம் நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்திரஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சி.ஆர்.லட்சுமிகாந்தன் அறக்கட்டளை சார்பில், காமராஜ் கல்விக் குழுமத் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் ஊக்கத்தொகை வழங்கினார். 
நிகழ்கல்வி ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது முதுகலை ஆசிரியை கே.உஷா, சிறந்த அலுவலர் விருது கே.கோவிந்தராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் மு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியை தமிழாசிரியர் என்.வேலாயுதம் தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com