கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையம் அமைப்பினர் விருத்தாசலம் பாலக்கரையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சத்தார்பாஷா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முகமதுபஷீர், பத்ரூ, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் ஆகியோர், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.