விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து தலைமை வகித்தார். பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன், கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மண்டலச் செயலர் திருமாறன், அமைப்புச் செயலர் இளமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலர் திராவிடமணி, செய்தித் தொடர்பாளர் பாலா, விருத்தாசலம் சட்டப் பேரவை தொகுதிச் செயலர் ஐயாயிரம், நெய்வேலி சட்டப் பேரவை தொகுதிச் செயலர் அதியமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாத இறுதிக்குள் பூத் கமிட்டி அமைப்பதென தீர்மானித்தனர்.