வள்ளலார் தெய்வ நிலையத்தில் எஸ்பி ஆய்வு

தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட

தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன் ஆகியோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தெய்வ நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து ஆலோசனைகளை வழங்கினர். ஆய்வில்போது, சார்-ஆட்சியர் (பொருள்கள்) வி.வெற்றிவேல், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா, தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com