வீட்டில் நகை திருடியதாக வேலைக்கார பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ரங்கப்பிள்ளை தெரு ஜே.ஜே.குடியிருப்பில் வசித்து வருபவர் மயதூர் சாகு. இவர் அரவிந்தர் ஆசிரம உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யபாமா. இவர்களது வீட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த மரியா ஜோஸ்பின் (36) வீட்டு வேலை செய்து வந்தாராம்.
இந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு சத்யபாமா தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி கட்டிலில் வைத்திருந்தாராம். அந்தத் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம். இதையடுத்து, சத்யபாமா பெரியக்கடை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸார், இரு வார காலமாக வேலைக்கு வராத ஜோஸ்பின்
மரியாவை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், சங்கிலியைத் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்த
போலீஸார், அவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனர்.