ஒசூரில் நடந்த ஆணவக் கொலையை கண்டித்து புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நடைபெற்ற ஆணவப் படுகொலையை கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தனியாக சிறப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்று ஆணவப்
படுகொலைக்கு எதிராகவும், ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.