இஸ்லாமிய புத்தாண்டான மொஹரத்தையொட்டி, புதுவை முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் புத்தாண்டான மொஹரம் பண்டிகை கொண்டாடும் இந்தத் தருணத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டில் ஒற்றுமை தான் நம் வலிமை என்பதை உணர்ந்து அனைவரோடும் நல்லுறவைப் பேணி வாழ உறுதியேற்போம்.
உற்றார், உறவினர் மட்டுமன்றி அனைவருடனும் அன்பு பாராட்டி, உதவிகள் செய்து நாம் இந்தியர்கள் நம்மை யாரும் பிரித்தாள முடியாது என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். புதுவை மாநிலத்தில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மொஹரம் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.