புதுவை முதல்வரின் போராட்டத்தின் காரணமாக பாரதி பூங்கா வியாழக்கிழமை மூடப்பட்டதால், அங்கு காதலர் தினத்தை கொண்டாட வந்த காதலர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கிரண் பேடியை வெளியேற வலியுறுத்தி ஆளுநர் மாளிகைக்கு எதிரே முதல்வர் வே. நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையை சுற்றி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டனர்.
இதனால் பாரதி பூங்காவின் 4 நுழைவாயில்களையும் போலீஸார் பூட்டினர்.
வழக்கமாக, காதலர் தினத்தையொட்டி பாரதி பூங்காவுக்கு அதிகளவிலான காதலர்கள் வருவது வழக்கம். ஆனால், போராட்டத்தின் காரணமாக பாரதி பூங்கா பூட்டப்பட்டதால், காதலர்கள் பூங்காவுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.