புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன அதிகாரி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கெüரிசங்கர் (31). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அவர் புதுச்சேரியில் உள்ள அவரது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இவரது இருசக்கர வாகனம் ஜிப்மர் மருத்துவமனை எதிரே வந்த போது, திண்டிவனத்திலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் கெüரிசங்கர் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.