புதுவை யூனியன் பிரதேசத்தில் உத்தேச மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரியில் வருகிற 22- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதுச்சேரி மின் துறை மற்றும் புதுச்சேரி மின் திறன் குழுமத்தின் 2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான நிகர வருவாய் தேவை, உத்தேச மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக புதுச்சேரியில் வருகிற 22- ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கட்டடத்தில் காலை 10 மணி முதல் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
இதற்கான விவரங்களை http://electricity.py.gov.in மற்றும் www.jercuts.gov.in ஆகிய இணைய முகவரிகளிலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.