ஆடிப் பட்ட பயிருக்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஆடிப் பட்ட பயிருக்கான பிந்தைய மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஆடிப் பட்ட பயிருக்கான பிந்தைய மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை கூடுதல் இயக்குநர் வேதாச்சலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக் கலை) அலுவலகம் மூலம் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆடிப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பழ வகை மரங்கள், வாழை, காய்கறிகளுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை விவசாயிகள் தங்களது பகுதிக்கு உள்பட்ட உழவர் உதவியகத்தில் பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே உழவர் உதவியகத்தில் வருகிற ஆக. 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com