மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற கள்ளக்குறிச்சி ஏகேடி சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றன. இதில், கள்ளக்குறிச்சி ஏகேடி நினைவு வித்யா சாகித் பள்ளி மாணவர்கள் 7 பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை மாவட்ட விளையட்டு அலுவலரும், இளைஞர் நல அலுவலருமான ஞானசேகரன் வழங்கி பாராட்டினார். இந்த நிலையில், பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட நீச்சல் போட்டியில் வென்ற மாணவர்களை பள்ளி முதல்வர் காமேஷ்வர் ராவ் பாராட்டி, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஆசிரியை லதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.