6,000 லிட்டர் எரி சாராயம் அழிப்பு

திண்டிவனம் மதுவிலக்கு போலீஸாரால் 4 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6,000 லிட்டர் எரிசாராயம் சனிக்கிழமை அழிக்கப்பட்டது.

திண்டிவனம் மதுவிலக்கு போலீஸாரால் 4 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6,000 லிட்டர் எரிசாராயம் சனிக்கிழமை அழிக்கப்பட்டது.
திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீரன்னன் உத்தரவின் பேரில், அவரது முன்னிலையில், திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் ஆற்றங்கரையில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் (பொ)மீனாட்சி தலைமையில் எரிசாராயம் அழிக்கும் பணி நடைபெற்றது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 176 கேன்களில் இருந்த 6,160 லிட்டர் எரி சாராயத்தை போலீஸார் 
ஆற்றங்கரையில் ஊற்றி அழித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com