விழுப்புரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழம நடைபெற்றது.
விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர் பி.அன்பழகன் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தார்.
மாநிலத் தலைவர் எஸ்.செல்லையா சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.அரிதாஸ், ஆர்.செல்வதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.குருமூர்த்தி, மாநில துணைத் தலைவர் ஏ.இந்திரா, தகவல் தொடர்பாளர் ஏ.இன்பராணி, வட்டாரத் தலைவர் எம்.கந்தன், பொருளாளர் பி.அன்புசிவம், கல்வி மாவட்ட செயலர் சசிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில சங்கத்தின் வழிகாட்டுதல்படி, ஜாக்டோ-ஜியோவின் டிச.4-ஆம் தேதி முதலான காலவரையற்ற போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பாராட்டு தெரிவித்தலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.செல்லையா மாநிலத் தலைவராக தேர்வானதுக்கு பாராட்டுக்கள்.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வில் ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய பணிக் காலத்தை கணக்கிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் கே.செந்தில் குமார் நன்றி கூறினார்.